வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கிடந்த மனைவி!
தனது மகளை பாடசாலை விட்டு வந்தவேளை வீட்டில் மனைவி வெட்டுக்காயங்களுடன் இரத்தம் பீறிட்டநிலையில் கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். எனினும் உடனடியாக செயற்பட்ட அவர் மனைவியை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இந்த சம்பவம் இன்றுகாலை 6.30 மணியளவில் பதுளை – அசேலபுர பகுதியில் இடம்பெற்றதாக பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். வீடு கட்டுமான பணிக்காக வந்தவரே இந்த செயலில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed