வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கிடந்த மனைவி!

தனது மகளை பாடசாலை விட்டு வந்தவேளை வீட்டில் மனைவி வெட்டுக்காயங்களுடன் இரத்தம் பீறிட்டநிலையில் கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். எனினும் உடனடியாக செயற்பட்ட அவர் மனைவியை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இந்த சம்பவம் இன்றுகாலை 6.30 மணியளவில் பதுளை – அசேலபுர பகுதியில் இடம்பெற்றதாக பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். வீடு கட்டுமான பணிக்காக வந்தவரே இந்த செயலில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.